மும்பை: மும்பையில் கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவித்த மக்களுக்கு தனது கணவருடன் இணைந்து இலவசமாக நடிகை சன்னி லியோன் உணவு வழங்கி சேவையாற்றி வருகிறார். இது குறித்து சன்னி லியோன் கூறுகையில், கடினமான காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்திற்கு எப்படி சாப்பாடு என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை அன்புடன் செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.