மும்பை: தொடர் சரிவுக்கு பின் வியாழக்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 48,081 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது . தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 110 புள்ளிகள் அதிகரித்து 14,406 புள்ளில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.