×

ஏற்றம் காணும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.53,840-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தினமும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.54,960க்கு விற்பனையானது. தொடர்ந்து 19ம் தேதி கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,890க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,120க்கும் விற்றது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் என்ற உச்சத்தை தொட்டது. இந்த ஜெட் வேக விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ரூ.86.50க்கு விற்கப்பட்டது. இந்த விலை வீழ்ச்சி நகை வாங்குவோர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,730-க்கும் சவரன் ரூ.53,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.86.50-க்கு விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்த நிலையில் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.

The post ஏற்றம் காணும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.53,840-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,SHAWARAN ,Shavaran ,
× RELATED நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில்...