×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475 புள்ளிகள் உயர்ந்து 74,328 புள்ளிகளில் நிறைவு..!!

மும்பை: சரிவு-உயர்வு என ஏற்ற, இறக்கங்களோடு இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் 0.75% அளவுக்கு உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 475 புள்ளிகள் உயர்ந்து 74,328 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. ஆக்சிஸ் வங்கி பங்கு 5.98%, எஸ்பிஐ 5%, ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல் 2.5%, நெஸ்லே, சன் ஃபார்மா பங்குகள் தலா 2% விலை உயர்ந்தன. ஐடிசி பங்குகள் 2%, என்டிபிசி பங்கு 1.9%, எம்&எம் பங்கு 1.7%, எச்சிஎல் டெக் பங்கு 1.6% விலை உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 168 புள்ளிகள் உயர்ந்து 22,570 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475 புள்ளிகள் உயர்ந்து 74,328 புள்ளிகளில் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,BSE Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!