சென்னை: தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டுகளுடன் தியேட்டர்களை தொடர்ந்து இயக்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் காணொலியில் நடத்திய ஆலோசனையில் முடிவு செய்துள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் புதிய அரசு அமைந்தவுடன் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.