×

தொகுதியில் அடிப்படை வசதிகள்: ஜான்பாண்டியன் வாக்குறுதி

சென்னை: அதிமுக கூட்டணியின் தோழமை கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் அதன் தலைவர் பெ.ஜான்பாண்டியன் எழும்பூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் கடந்த ஒரு வாரமாக அந்த தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்து வருகிறார். அதன்படி நேற்று காலை 8 மணிக்கு எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 104வது வார்டில் சுந்தரம் தெரு, புது மேற்கு தாண்டவராயன் தெரு, பொன்னன் தெரு, சண்முகராயன் தெரு, திடீர் நகர், சாலை மாநகர், பிரிக்ளின் சாலை, சுந்தரம் லேன் கிராம தெரு, மேனட் தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, முத்தையால் தெரு, சுப்ரமணி தெரு, கங்காதீஸ்வரர் தெரு, சரவண பெருமாள் தெரு, அரசப்ப தெரு, முத்தையா நாயக்கன் தெரு, பெருமாள் 1வது, 2வது தெரு, சோலையம்மன் கோயில் தெரு, வீராசாமி தெரு, சோலையப்பா தெரு, ரத்திரனசபாபதி தெரு,

வாசுதேவன் தெரு, கந்தப்பா தெரு, நான்சி தெரு மற்றும் சுந்தரன் தெரு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கிருந்த பெண்கள் அவரை உற்சாகமாக வரவேற்று, மலர்தூவி, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அப்போது, ஜான்பாண்டியன் பேசியதாவது, “அதிமுக வெற்றி பெற்றவுடன் தேர்தல் வாக்குறுதிளை அறிவிக்கப்பட்டவை அனைத்தும் என் தொகுதி மக்களுக்கு பெற்று தருவேன். தொகுதி மக்களுக்களின்  அடிப்படை பிரச்சனை மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி கொடுப்பேன்” என்றார்.



Tags : Janpandian Promise , Basic Amenities in the Constituency: Johnpondian Promise
× RELATED முதல்வர் அலுவலகத்திற்குள் அத்துமீறி...