பேரவையில் மாஜி அமைச்சரும் காங்கிரஸ் உறுப்பினருமான தன்வீர் சேட், சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு மைசூருவில் விளையாட்டு மைதானம் இல்லை. வரலாற்று சிறப்பு மிக்க மைசூருவில் இது போன்ற மைதானம் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மைசூருவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் வகையில் மைதானம் அமைக்கவேண்டும், என்றார்.
இதற்கு அமைச்சர் நாராயணகவுடா பதில் அளித்து கூறுகையில், விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் ஊக்கம் அளித்து வருகிறோம். அதே நேரம் மைசூருவில் சர்வதேச போட்டிகள் நடைபெறும் வகையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றார்.