×

துளுமொழியில் தேர்வு எழுதிய 72 வயது மூதாட்டி

மங்களூரு: தாய்மொழியான துளு மொழியை கற்கும் ஆர்வத்தில் துளு அகாடமி சார்பில் நடத்தப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்ட 72 வயது மூதாட்டி ஒருவர் துளு மொழி தேர்வு எழுதிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மங்களூரு மாவட்டம் பண்டுவால் தாலுகா பண்டாரிபெட்டு பகுதியில் துளு அகாடமி சார்பில் நான்கு வார கால துளு மொழிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் துளு மொழி எழுத படிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த இந்த பயிற்சியில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு  தேர்வு நடந்தது. அதில் 30 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த 30 பேரில் 72 வயது மூதாட்டி ஒருவர் தாய்மொழியான துளு மொழியை கற்கும் ஆர்வத்தில் துளு மொழி தேர்வு எழுதியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Tags : Tulu , EXAM , OLD LADY
× RELATED ரூ.2.88 கோடி தங்கம் கடத்தல் 2 பெண்கள் கைது