×

விஞ்ஞானிகள் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க வேண்டும்: அமைச்சர் ஆர்.சங்கர் அறிவுரை

பெங்களூரு: பெங்களூரு ஹெசரகட்டாவில் தோட்டக்கலை சார்பாக கண்காட்சி மற்றும் விற்பனை மேளா நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர். சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தி செய்வதில் மாநிலம் 8-வது இடத்தில் உள்ளது. இதை 2-3 இடத்துக்கு கொண்டு வரவும் பயிர்களை அதிகப்படுத்தவும் விஞ்ஞானிகள் முயற்சிக்க வேண்டும். அதேபோல், விவசாயிகள் கூட மாற்று பயிர்களை பயிரிடுவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விவசாயிகள் வாழ வேண்டியுள்ளது. இதனால் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்றடைய வேண்டும். பொருட்களை விற்பனை செய்ய மார்க்கெட் கிடைக்க வேண்டும். இதற்காக சில நிறுவனங்கள் முன் வந்துள்ளது இதன் மூலம் விவசாயிகள், வியாபாரிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் வேலை செய்ய வேண்டும். விவசாயிகளுக்காக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய வேண்டும்’’ என்றார்.  


Tags : Scientists ,R. Shankar , Scientists need to make new discoveries: Minister R. Shankar advises
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு