×

ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலம்: காங்கிரஸ் சாடல்

டெல்லி: ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலமாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ரயில்கள் ரத்தால் பல்லாயிரக்கணக்கானோர் வாக்களிக்க முடியாமல் தவிப்பு:

அசாமில் 7 ரயில்கள் ரத்தால் பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அசாமில் கரீம்கஞ்ச், சில்சார், மங்கல்டோய், நவ்கோங், கலியபோர் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கும் சில மணி நேரத்துக்கு முன்பு அசாமில் 7 ரயில்கள் ரத்தால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சில்சார், கரீம்கஞ்ச் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜதிகா லம்பூர் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 7 ரயில்கள் ரத்து என வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் தேர்தல் நடக்கும் நேரத்தில் ரயில்கள் ரத்தால் சர்ச்சை நிலவுகிறது. ரயில்கள் ரத்தால் வாக்களிக்க முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அசாமில் இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் பா.ஜ.க. சதி – காங்கிரஸ்

ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலமாகியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அசாமில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் பா.ஜ.க. கடும் பின்னடைவை சந்திக்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது. பா.ஜ.க. நெருக்கடியை சந்திக்கும் தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலம்: காங்கிரஸ் சாடல் appeared first on Dinakaran.

Tags : Islamists ,J. K. ,Delhi ,Congress party ,Win ,Assam ,J. K. Win ,Congress Saddle ,Dinakaran ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு...