சென்னை: காரைக்குடி அழகப்பா, கோவை பாரதியார் பல்கலைக்கழகங்களில் முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு அளித்ததற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூக நீதியை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னேறிய பிரிவினருக்கான ஒதுக்கீடு தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு அறிவிப்பை மீறி அழகப்பா, பாரதியார் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு செயல்பட்டது எப்படி? என்று அவர் கேள்வி எழுப்பினார்.