சென்னை: எந்த ஆதாரமும் இல்லாமல் திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார் என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நீதிமன்றத்தில் புறக்கணிக்கப்பட்ட வழக்குகளை எடுத்துப்பேசி ஆதாரம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறார். தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது என குறிப்பிட்டார்.