×

பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்க.: கோவை நீதிமன்றம் முன் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கோவை நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் தமிழக அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மாதர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தால் கோவை நீதிமன்றம் முன் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : atrocity ,Pollachi ,Democratic Mathers Union ,court ,Coimbatore ,protest , Arrest all those involved in the Pollachi atrocity .: Democratic Mathers Union protest in front of Coimbatore court
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...