×

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுவன் பலி: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வேன் கவிழ்ந்து 7 வயது சிறுவன் உயிரிழந்தான். பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றுக் கொண்டு உதகைக்கு வேன் ஒன்று சென்றுது. உதகையிலிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் வந்தபோது வேன் விபத்தில் சிக்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பவானிசாகர் அணை காட்சி முனை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேல் சிகிச்சைக்காக 10 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு விரைந்து சென்ற எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

The post மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுவன் பலி: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்! appeared first on Dinakaran.

Tags : Highlands ,KOWAI ,KOTHAGIRI ROAD ,METUPPALAYAM ,Perambalur district ,Mautuppalayam ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் இன்று காலை...