×

வாங்கிய கடனை கட்டாமல் என்ஓசி கொடுக்காததால் அதிகாரி மீது தாக்குதல்

கோலார்: கடன் பணத்தை கட்டாமல் தடையில்லா சான்றிதழ் கேட்டு அதிகாரியை தாக்கிய சம்பவம் மாலூரில் நடந்துள்ளது.
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா இந்துமங்களா கிராமத்தில் வசித்து வருபவர் நாரயணசாமி. இவர் மாலூர் தாலுகா ஆரம்ப விவசாய கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வாங்கிய கடனை கட்டாமல் என்ஓசி (தடையில்லா சான்றிதழ்) கொடுக்க கேட்டுள்ளார். இதற்கு கூட்டுறவு வங்கி அதிகாரி பணம் கட்டாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கமுடியாது என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நாராயணசாமி, அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நாராயணசாமிக்கு எதிராக மாலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : officer ,NOC , Attack on the officer for not paying the NOC without paying the purchased loan
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல்...