சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவடியை சேர்ந்த புகைப்பட கலைஞர் கிரிதரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.