×

வண்ணார்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை, டிச. 18: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வண்ணார்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வங்கிகள் தனியார்மயமாவதை கண்டித்து வங்கி ஊழியர் சங்கங்கள், இருநாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். தொமுச மகாவிஷ்ணு, முருகன், சிஐடியு மோகன், பெருமாள், முருகன், ஏஐடியுசி காசிவிஸ்வநாதன், சடையப்பன், பாலகிருஷ்ணன், எச்எம்எஸ் சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், ஐஎன்டியுசி கண்ணன், மாரியப்பன், சிவப்பிரகாசம், ஏஐசிசிடியு சங்கரபாண்டியன், கணேசன், பணியாளர் சம்மேளனம் சந்தானம், உத்திரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Washermenpet ,
× RELATED வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில்...