×

எனது கல்லூரியை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்: விஜயகாந்த் ட்வீட்

சென்னை: ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தாராளமாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளேன் என விஜயகாந்த் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை உள்ளது என தெரிவித்துள்ளார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தாராளமாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளேன் என கூறியுள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது, கொரோனா நோயாளிகளுக்காக ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தேன். அதேபோல் இந்த ஆண்டும் ஆண்டாள் அழகர் கல்லூரியை வழங்குவதோடு, இது தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எனது கல்லூரியை கொரோனா சிகிச்சை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கூறினார்….

The post எனது கல்லூரியை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்: விஜயகாந்த் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : treatment ,Vijayakanth ,Chennai ,Tamil Nadu government ,Andal Alakar Engineering College ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை