சென்னை: நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை போனில் பேசிய மர்ம நபர், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீடு மற்றும் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி இணைப்பை துண்டித்தார். உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக் கப்பட்டு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் இருவரது வீட்டிற்கும் சென்று சோதனை செய்தனர்.
2 மணி நேர சோதனைக்கு பின் அது வெறும் புரளி என தெரியவந்தது. ஏற்கனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுவை முதல்வர் நாராயணசாமி, நடிகர்கள் விஜய், தனுஷ், சூர்யா ஆகியோர் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஷ் என்ற நபர்தான் கமல் மற்றும் சரத்குமார் வீட்டுக்கும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.