சென்னை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. மருத்துவ மேற்படிப்பில் காலியாக இருந்த 74 இடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சிபிசிஐடி இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.