சென்னை: கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நகர், புறநகரில் வேணாம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை ராஜஸ்தான், பஞ்சாப் மாநில பகுதிகளில் இருந்து விலக தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.