சென்னை: சென்னை அமைந்தகரையில் நேற்று பெரியார் படத்துக்கு மலர்தூவி பிறந்தநாள் கொண்டாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் தளபதி பாண்டியன் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.