×

மீனவர்கள் போராட்டம்

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் பைபர் படகுகளை நிறுத்தி வைக்கக் கூடிய இடத்தை மீன்பிடித் துறை உதவி இயக்குனர் திடீரென காலி செய்து தர வேண்டும் என்று கூறியதால் அதனை எதிர்த்து மீனவர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “பைபர் படகுகளை நிறுத்தக்கூடிய இடத்தில் பார்சல் சேவைகளுக்காக மாற்றப்படுவதாக மீன்பிடித்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

மீனவர்கள் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் பைபர் படகுகளை கட்டி வைத்துள்ளோம். பைபர் படகுகளை பழுதுபார்க்கும் இடமாக அதனைப் பயன்படுத்தி வருகிறோம். தற்போது, உடனடியாக அந்த இடத்தை காலி செய்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினர்.


Tags : Fishermen , Fishermen, struggle
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...