×

விசாகப்பட்டினத்தில் பரபரப்பு நடுக்கடலில் படகில் சிலிண்டர் வெடித்து 9 மீனவர்கள் படுகாயம்

*மீன்களை பிடித்துக்கொண்டு திரும்பியபோது பயங்கரம்

திருமலை : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடலில் மீன்பிடி படகில் சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதில் 9 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த மாதம் 26ம் தேதி படகில் மீன்பிடிக்க சென்றனர். மீன்களை பிடித்துக்கொண்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். விசாகப்பட்டினம் கடலில் இருந்து 65 நாட்டிக்கல் தூரத்தில் காக்கிநாடா அருகே வந்தபோது படகில் இருந்த ஜெனரேட்டரில் மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது.

இதில் அங்கிருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தது. படகில் இருந்த 9 மீனவர்களும் பலத்த தீக்காயம் அடைந்தனர். தீ விபத்தால் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் மற்றொரு படகில் வந்த மீனவர்கள் இவர்களை மீட்டு தங்கள் படகில் ஏற்றிக்கொண்டனர். பின்னர் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த இந்திய கடலோர காவல்படை வீரர்கள், மீனவர்களை மீட்டு ஐசிஜிஎஸ் வீரா கப்பலில் வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதில் மீனவர்கள் சத்திபாபு, வஜ்ரம், சத்திபாபு, தர்மராவ், சத்திபாபு ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து அனைவரும் விசாகப்பட்டினம் கரைக்கு அழைத்து வரப்பட்டு கப்பல்துறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ்கள் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த காக்கிநாடா மீன்வளத்துறை அலுவலர் கருணாகர், மீன்பிடி துறைமுக பி.ஓ.அனுராதா ஆகியோர் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மீனவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு பிறகு காக்கிநாடா அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விசாகப்பட்டினத்தில் பரபரப்பு நடுக்கடலில் படகில் சிலிண்டர் வெடித்து 9 மீனவர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Visakhapatnam ,Pankaram Tirumalai ,AP ,Visakhapatnam Sea ,Jeganathapuram ,Kakinada district ,Dinakaran ,
× RELATED பரோலில் வந்தபோது தப்பிய கைதி விசாகப்பட்டினத்தில் சுற்றிவளைப்பு