சென்னை: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 49 வயது நபர் கொரோனா தொற்று உறுதியானதால் தப்பி ஒடியதாக கூறப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் வீட்டுக்கு சென்றபோது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாயமானது தெரியவந்துள்ளது. சுகாதார ஆய்வாளர் ரமேஷ் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.