×

தொடர்ந்து மிரட்டும் கொரோனா; நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி

நாகை: நாகை இந்திய கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்திலும் மக்களுக்கு தொடர் சேவையில் ஈடுபடும் எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகளும் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர்.  இந்நிலையில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : M. Selvaras ,Corona ,Naga , Corona, Nagai, Member of Parliament, M. Selvaraj
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா