×

வரும் 31ம் தேதி வரை சென்னை-கொல்கத்தா விமான சேவை ரத்து

சென்னை: மேற்கு வங்க மாநில அரசு தங்களது மாநிலத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, கொரோனா அதிகமாக உள்ள சென்னை, டெல்லி, மும்பை ஆகிய இடங்களிலிருந்து விமானங்கள் தங்கள் மாநிலத்திற்கு வருவதற்கு கடந்த 6ம் தேதியிலிருந்து நேற்று (19ம் தேதி) வரை தடைவிதித்திருந்தது. இந்நிலையில் சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் 5 விமானங்களும், அதேபோல் மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரிக்கு வாரத்தில் 5 நாட்கள் சென்னையிலிருந்து செல்லும் விமானங்களும் கடந்த 14 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தடை நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து 20ம்தேதியிலிருந்து (இன்று) சென்னையிலிருந்து மேற்குவங்கம் மாநிலத்திற்கு பயணிகள்  விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தடையை மேற்கு வங்க அரசு வரும் 31ம் தேதி வரை நீடித்துள்ளது.

Tags : flight ,Kolkata ,Chennai , Chennai-Kolkata flight canceled till 31st
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...