×

எஸ்.ஐ மகனுக்கு சரமாரி வெட்டு

அம்பத்தூர்:  அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் யுவராஜ்  (30). தனியார் நிறுவன அதிகாரி. இவரது தந்தை மகேஸ்வரன் ஓய்வுபெற்ற சப்- இன்ஸ்பெக்டர்.
  நேற்று முன்தினம் இரவு யுவராஜ், அதே பகுதியில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 4 பேர் யுவராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.  படுகாயமடைந்த யுவராஜ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  போலீசார்  விசாரணையில், அந்த பகுதியில் கஞ்சா, மது போதையில் ரகளை செய்பவர்களை யுவராஜ் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சண்முகபுரம் சூர்யா (24),  அன்னை தெரசா தெரு கார்த்திக் (22), ரட்சகன் தெரு வினோத் என்ற பென்னி (22),  கள்ளிக்குப்பம், அருள் நகர் யுவராஜ் (23) ஆகியோர் எஸ்ஐ மகன் யுவராஜை வெட்டியது தெரிந்தது. அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : SI , SI son
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது