காஞ்சிபுரம் : சீனப் படையுடன் ஏற்பட்ட மோதலில், வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடந்தது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள அலுவலகத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.வி.மதியழகன் தலைமை தாங்கி, சீன தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார். இதில் நகர காங்கிரஸ் தலைவர் இராம.நீராளன், வட்ட துணை தலைவர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் வீரபத்திரன், மாவட்ட பொது செயலாளர் லோகநாதன், குமார், நகர துணை தலைவர்கள் கருணாமுர்த்தி, சுகுமாரன், சந்தானம், நகர.பொருளாளர் குப்புசாமி, பாலாஜி, பவுல், மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.