சென்னை: முழு பொது முடக்கம் அமலாகவுள்ள சென்னை மற்றும் 3 மாவட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் சில பகுதிகளில் அம்மா உணவகங்களில் 12 நாட்களுக்கு உணவு இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 30 ஆம் தேதி வரை அம்மா உணவகங்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும்.