புதுடெல்லி: 5 லட்சம் வரையிலான வரி ரீபண்ட்களை உடனே வழங்க உள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை வௌியிட்ட அறிவிப்பில், ‘கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, தொழில்துறையினர் மற்றும் தனிநபர்களுக்கு உதவும் வகையில், ₹5 லட்சம் வரையிலான வரி ரீபண்டுகளை உடனே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 14 லட்சம் பேர் பலன் அடைவார்கள். இதுபோல், ஜிஎஸ்டி மற்றும் சுங்க ரீபண்ட் சுமார் 18,000 கோடி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் ஒரு லட்சம் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பலன் பெறுவார்கள்’ என கூறப்பட்டுள்ளது.