×

கொரோனாவுக்கு ஒருவர் பாதிப்பு மொளச்சூர் ஊராட்சி எல்லை அடைப்பு: கலெக்டர் நேரில் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. இந்தவேளையில், மொளச்சூர் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மொளச்சூர் ஊராட்சி எல்லைகளை மூடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என சுகாதார துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Tags : Coronavirus Molucur,Panic Disruption,Collector's Eye Study
× RELATED திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில்...