சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடி்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மக்கள் எங்கு அதிகமாக கூடுகிறார்களோ அங்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது, என கூறியுள்ளார்.