×

நடைபயிற்சி செய்த பெண்ணிடம் சில்மிஷம்

சென்னை: பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி நகர் பகுதியில் வசிப்பவர்கள் தினசரி அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் ஒரு இளம்பெண் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, சுமார்  23 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது, வாலிபர் திடீரென அந்த பெண்ணை  பிடித்து சில்மிஷம் செய்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால், அந்த வாலிபர் தப்பிஓடிவிட்டார்.  இதுகுறித்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Walking, girl, chillism
× RELATED ஆடு திருடியதாக கட்டப்பஞ்சாயத்து ரூ3...