×

திருச்சியில் லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க முடிவு

சென்னை: 2017ல் சென்னையில் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய முருகனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. பெங்களூரு சிறையில் இருந்த முருகனை காவலில் எடுத்து கடந்த 2 நாட்களாக சென்னை போலீஸ் விசாரித்து வந்தது. முருகன் மீது தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது.மேலும் விவரங்களை பெற வேண்டி உள்ளதால் திருவாரூர் முருகனை மீண்டும் காவலில் எடுக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. திருச்சியில் நடந்த லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுவர் திருவாரூர் முருகன்.எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் முருகனை ஆஜர்படுத்தி காவலில் எடுக்க போலீஸ் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Lalitha , Robbery
× RELATED ஏரியில் மூழ்கி தாய், மகள் உட்பட 4 பெண்கள் பலி