×

திருடனுக்கு தகவல் கொடுத்து தப்ப வைத்த விவகாரம் தேனாம்பேட்டை எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட் : இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவு

சென்னை: திருடனுக்கு தகவல் கொடுத்து தப்பிக்க உதவிய தேனாம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவரை இணை கமிஷனர் மகேஸ்வரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளியான மகேஷ்(எ)போலீஸ் மகேஷ் என்பவனை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவனது செல்போனையும் பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் குருமூர்த்தி என்பவரின் செல்போன் நம்பர் அதில் பதிவு ஆகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் உதவி ஆய்வாளர் குருமூர்த்தியுடன் பல முறை மணிக்கணக்கில் பேசியது தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவம் குறித்து குற்றவாளி போலீஸ் மகேஷிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, உதவி ஆய்வாளர் குருமூர்த்தி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய  போது, திருட்டு வழக்கு ஒன்றில் போலீஸ் மகேஷை பிடிக்க தனிப்படை  அமைத்திருந்தனர். தனிப்படையினர் பல்வேறு முயற்சி ெசய்தும் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. தனிப்படையினர் குற்றவாளியை பிடிக்க ஒவ்வொரு முறையும் செல்லும் போது உதவி ஆய்வாளர் குருமூர்த்தி செல்போனில் தகவல் கொடுத்து தப்பி செல்ல உதவி செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளியுடன் கூட்டு சேர்ந்து உதவி ஆய்வாளர் குருமூர்த்தி திருட்டு சம்பவத்திற்கு உதவி வந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து உயர் போலீசார் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் கமிஷனர் உதவி ஆய்வாளர் குருமூர்த்தியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன்படி போலீஸ் உயரதிகாரிகள் உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திருட்டு வழக்கு குற்றவாளியான போலீஸ் மகேஷ் என்பவருடன் இணைந்து குற்றங்களில் ஈடுபட்டதும், அவன் தப்பிக்க உதவி செய்ததும் ஒப்பு கொண்டாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி இணை கமிஷனர் மகேஸ்வரி அதிரடியாக உதவி ஆய்வாளர் குருமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : SI Action ,Thiruvananthapuram Magistrate , SI Suspended, Thiruvananthapuram Magistrate
× RELATED ஆந்திராவில் மணல் கடத்தலை தடுத்ததால்...