கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் வரும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.