×

குடிப்பழக்கத்தை கண்டித்ததால் ஆத்திரம் மனைவிக்கு கத்திரிக்கோல் குத்து: தப்பிய கணவனுக்கு வலை

சென்னை: குடிப்பழக்கத்தை கண்டித்ததால் ஆத்திரமடைந்த டிரைவர், தனது மனைவியை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திய சம்பவம் விரும்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விருகம்பாக்கம் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (40). டிரைவரான இவருக்கு, மனைவி சித்ரா (36) மற்றும் குழந்தைகள் உள்ளனர். நாகராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் பணி முடிந்து தினமும் குடித்துவிட்டு தனது மனைவி சித்ராவிடம் தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது உறவினர் ஒருவருடன் நாகராஜ் குடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த அவரது மனைவி சித்ரா தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் போதையில் தனது மனைவி சித்ராவை கடுமையாக தாக்கினார். பின்னர், வீட்டில் வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் வலித்தாங்க முடியாமல் சித்ரா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் காயமடைந்த சித்ராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்ராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அறித்த தகவலின் படி விருகம்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நாகராஜை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரத்தில் விருகம்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

* ஆசிட் குடித்து மனைவி தற்கொலை
அடையாறு, தாமோதரபுரத்தை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (50). இவரது மனைவி காந்திமதி (47). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை காந்திமதி வீட்டில் இருந்த பாத்ரூம் கழுவும் ஆசிட்டை குடித்துவிட்டு மயங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார்.  இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், சாந்தமூர்த்திக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சாந்தமூர்த்தி கள்ளத்தொடர்பை விடவில்லை. இதனால் மனமுடைந்த காந்திமதி ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள சாந்தமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Drunk, rage, wife, scissors, husband, web
× RELATED ஆடு திருடியதாக கட்டப்பஞ்சாயத்து ரூ3...