சென்னை: அடுத்தவர்கள் வீட்டில் கோலம் போடுவதாக புகார் வந்ததால் தான் சென்னையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் யாரும் தன் வீட்டில் கோலம் போட்டால் பிரச்சனை இல்லை: அடுத்தவர்கள் வீட்டு வாயிலில் கோலம் போட்டதால் கைது நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.