×

இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் முகுந்த் நராவனே

டெல்லி: இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்றார். இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ராணுவ துணைத் தளபதியான முகுந்த் நராவனே ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றார். முன்னதாக நராவனே, சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். கடந்த 37 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருக்கும் நராவனே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்சியை கட்டுப்படுத்துவது, அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

Tags : Manoj Mukund Naravan ,Indian Army , Indian Army, Chief of Staff, Manoj Mukund Naravan
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...