×

போக்சோவில் அரசு ஊழியர் சிறையிலடைப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர், லெனின் நகர், 2வது மெயின் ரோட்டில் வசிக்கும் தம்பதிக்கு 6 மற்றும் 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர். கடந்த 30ம் தேதி மாலை இரு சிறுமிகளும் டியூஷன் சென்றுவிட்டு லெனின் நகர், 10வது மெயின் ரோடு வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.  அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சுந்தரமூர்த்தி (73) என்பவர்,  10 வயது சிறுமியை தனியாக அழைத்து, பேச்சு கொடுத்தபடி கன்னத்தில் முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், சிறுமி அலறி கூச்சலிட்டார்.  

இதையடுத்து சுந்தரமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடினார். அக்கம் பக்கத்தினர் 2 சிறுமிகளையும் மீட்டு அவர்களது வீட்டில் கொண்டு விட்டனர். அங்கு சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பெற்றோர் இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தியை நேற்று கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



Tags : servant , Civil servant , Bokso Incarceration
× RELATED தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்...