சென்னை: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சேஷன் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சிறந்த நிர்வாகி, கடின உழைப்பாளி, அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார் சேஷன் என பெருமிதம் தெரிவித்தார்.