சென்னை: இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி திருநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து, மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.