சென்னை: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு சட்டத்திற்கு எதிரானது என்று மனுதாரர் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.