சென்னை: உலகத்தரத்தில் இந்திய வங்கிகள் வருவதற்கு பொதுத்துறை வங்கிகளை இணைப்பது வரவேற்கத்தக்கதே என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், எனினும் அவர்களுடைய சந்தேகத்தை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் கூறியுள்ளார். தகவல் தொழில் நுட்பம், ஆட்டோமொபைல் துறை பாதிப்பு என்பது தற்காலிகம் தான், விரைவில் இதிலிருந்து மீண்டு இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.