சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், போலீசாருக்கான ரத்த தான முகாமை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 81 இடங்களில் நடைபெறும் முகாம்களில் 13,868 காவலர்கள் ரத்த தானம் வழங்குகின்றனர்.மே மாதம் கல்லுாரி விடுமுறை என்பதால் கொடையாளிகளிடம் இருந்து ரத்தம் பெறுவது குறைவாக உள்ளது.தேவையைப் பூர்த்தி செய்ய ஜூனில் போலீசிடம் இருந்து ரத்தம் பெற்று ரத்த வங்கிகளுக்கு வழங்கப்படுகிறது.