சென்னை: விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக வளர்ச்சிப் பணிகளில் தீவிரமாக பணியாற்றியவர் ராதாமணி என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு சட்டப்பேரவையில் உறுதியாக குரல் கொடுத்தவர் ராதாமணி என்றும், ராதாமணி மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.