×

இன்ஜினியர் மண்டை உடைப்பு

ஆவடி:  ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், கணபதி நகரை சேர்ந்தவர் நிர்மல்குமார் (20). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தேவிகா (65). இவர், வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த 3ம் தேதி தேவிகா, வீட்டு நாய் தெருவில் நின்ற  நிர்மல்குமாரை கடித்துள்ளது. பின்னர், 6ம் தேதி அவரது தங்கையையும்  அதே நாய் கடித்துவிட்டது.

நேற்று முன் தினம் இதுபற்றி முறை யிட்டபோது தகராறு ஏற்பட்டது.  அப்போது தேவிகா, அருகில் கிடந்த  கட்டையை எடுத்து நிர்மல்குமார் தலையில் சரமாரி அடித்துள்ளார். இதில், அவர் மண்டை உடைந்தது. புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவிகா, அவரது மகன் ரஜினியை கைது செய்தனர்.


Tags : Engineer skull break , Engineer, skull broken
× RELATED நாய் கடித்த தகராறு இன்ஜினியர் மண்டை உடைப்பு