×

நாய் கடித்த தகராறு இன்ஜினியர் மண்டை உடைப்பு

ஆவடி, ஜூன் 11:  திருமுல்லைவாயலில் நாய் கடித்த தகராறில் டிப்ளமோ இன்ஜினியரின் மண்டையை உடைத்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், கணபதி நகர், கன்னிமூல கணபதி தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் நிர்மல்குமார் (20). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தேவிகா (65). இவர், வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 3ம் தேதி தேவிகா, வீட்டு நாய் தெருவில் நின்ற  நிர்மல்குமாரை கடித்துள்ளது. பின்னர், 6ம் தேதி அவரது தங்கையையும்  அதே நாய் கடித்துவிட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் தேவிகா மகனான ரஜினி (32) என்பவரிடம் நிர்மல் குமார், உங்கள் நாய் எங்கள் வீட்டில் இரண்டு பேரை கடித்துவிட்டது. எனவே அந்த நாயை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது, அங்கு இருந்த தேவிகா, அருகில் கிடந்த  கட்டையை எடுத்து நிர்மல்குமார் தலையில் சரமாரி அடித்துள்ளார். இதில், அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமுல்லைவாயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவிகா, ரஜினி ஆகியோரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.

Tags : engineer skull break ,
× RELATED இன்ஜினியர் மண்டை உடைப்பு