×

கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் புறக்கணிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜ கண்டிகையில் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். நச்சு தொழிற்சாலையை மீண்டும் செயல்பட அனுமதித்ததற்கு நாகராஜ கண்டிகை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 552 வாக்காளர்கள் உள்ள கிராமத்தில் 10 மணி வரை ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. தேர்தல் அதிகாரிகள், அதிமுக எம்.எல்.ஏ., காவல்துறையினர் வாக்களிக்க வருமாறு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gummidipondi , Election, boycott
× RELATED புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்